top of page

காதலன் பாரதி - 1

  • Writer: Divya Bharathi
    Divya Bharathi
  • Nov 10, 2020
  • 1 min read

கண்ணம்மா- என் காதலி 1

காட்சி வியப்பு


1. சுட்டும்வழிச் சுடர் தான்,- கண்ணம்மா

சூரிய சந்திரரோ?

வட்டக் கருவிழி,- கண்ணம்மா

வானக் கருமைகொல்லோ?

பட்டுக் கருநீலப்- புடவை

பதித்த நல்வயிரம்

நட்ட நடுநிசியில்-தெரியும்

நக்ஷத்தி ரங்களடீ !


2. சோலைமல ரொளியோ -உனது

சுந்திரப் புன்னகைதான் ?

நீலக்கட வலையே - உனது

நெஞ்சி லலைகளடீ !

கோலக்குயி லோசை - உனது

குரலி னிமையடீ !

வாலைக் குமரியடீ,- கண்ணம்மா

மருவக் காதல்கொண்டேன்.


3. சாத்திரம் பேசுகிறாய்,- கண்ணம்மா

சாத்திர மேதுக்கடீ?

ஆத்திரங் கொண்டவர்க்கே,- கண்ணம்மா

சாத்திர முண்டோடீ?

மூத்தவர் சம்மதியில் - வதுவை

முறைகள் பின்புசெய்வோம்;

காத்திருப் பேனோடீ?- இது பார்,

கன்னத்து முத்தமொன்று !



உரை


கண்ணம்மா- பாரதியின் காதலி.

-சூரியனோ சந்திரனோ என்று சந்தேக படும் அளவுக்கு அவள் கண்கள் பளிச்சென்று இருந்ததாம்.

-அவளது கரு விழிகள் வானின் கருமையை போல இருந்ததாம்.

-அவள் உடுத்தியிருக்கும் வெள்ளை பதித்த கருநீல புடவை நாடு இரவில் வானில் தோன்றும் நக்ஷத்திரங்களை போல இருந்ததாம்.

-அவள் சிரிக்கையில் மலர் தோட்டத்தில் இருக்கும் மலர்கள் மலர்வது போல் மென்மையானதாம். (

-அவளின் எண்ணங்கள் நீலக்கடலின் அலைகளை போன்றதாம்.

-அவளது குரல் குயிலின் குரலை போன்ற இனிமையாம்.

-இளம் குமரியின் மீது மயக்கம் கொண்டு தீரா காதல் கொண்டாராம்.

-இதெல்லாம் பேசும் பொது அவள் சாத்திரம் பேசுகிறாள் திருமணம் இல்லமால் இப்படி பேசலாமா என்பது போல, அதற்கு அவர் கூறுவது சாத்திரங்கள் நம்மை போன்ற காதலர்களுக்கு எதற்கடி

-பெரியவர்கள் சம்மதத்தில் திருமணம் பின்னர் செய்து கொள்ளலாம், -அதுவரையில் எப்படி காத்திருக்க முடியுமடீ கண்ணம்மா, என்று கூறி கன்னத்தில் ஒரு முத்தமிட்டார் காதலன் பாரதி.


1. வாலைக் குமரி- வயதுக்கு வராத இளம் பெண்

2. வதுவை முறைகள்- திருமணம்





எப்படி பட்ட காதலன் பாரதி ??


உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

1 Comment


Santhosh Senthil Kumar
Santhosh Senthil Kumar
Nov 10, 2020

Arumai.

I would like to share my all time favorite of the legendary poet. Please read the following "amutha oottru" lines.


காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்

காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு

தூற்றினை யொத்த இதழ்களும் - நில

வூறித் ததும்பும் விழிகளும் - பத்து

மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த

வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை

வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்

விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று)


நீயென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த

நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்

போயின, போயின துன்பங்கள் நினைப்

பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன்

வாயினி லேயமு தூறுதே - கண்ணம்

மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்

தீயினி லேவளர் சோதியே - என்றன்

சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)

Like
bottom of page